பெண் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் சமேலி தேவி ஜெயின் விருது ஆன்லைன் பத்திரிகையாளரான சுப்ரியா சர்மாவுக்கு வழங்கப்படவுள்ளது. ஆன்லைன் பத்திரிகையாளருக்கு இவ்விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
தி மீடியா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு வழங்கும் 2014-15 ஆம் ஆண்டுக்கான விருதுக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்க்ரால்.இன் (Scroll.in) இணையதளத்தின் ஆசிரியர் சுப்ரியா சர்மாவுக்கு வரும் 19-ம் தேதி இவ்விருது வழங்கப்படுகிறது.
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த பல்வேறு செய்திகளை வெளியிட்டதற்காகவும், நாட்டு நடப்பு குறித்த பல்வேறு தகவல்களையும் திறம்பட தெரிவித்தமைக்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேர்வுக் குழுவில், மின்ட் பத்திரிகையின் ஆர்.சுகுமார், என்.டி.டி.வி.யின் ரவீஷ் குமார், இந்தியா டுடே குழுமத்தின் காவேரி பம்சாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
உலகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago