தேர்தலில் போட்டியிட சீட் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் போட்டியிட இடம் தருவதாகக் கூறி கலாவதி என்பவரிடம் ரூ.ஒரு கோடியே 75 லட்சம் லஞ்சம் பெற்றதாக ரேணுகா சவுத்ரி மீது புகார் எழுந்தது.
மோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரேணுகா சவுத்ரி மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
13 hours ago