2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்களை தயாரிக்கும் பணி, அல்வா செய்து வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பட்ஜெட் ஆவணங்களை தயாரிக்கும் பணி தொடங்கும் முன்பு அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் அல்வா செய்து வழங்கப்படுவது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும்.
டெல்லியில் நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றார்.
பட்ஜெட் தயாரிப்பின்போது அதில் பங்கேற்கும் அலுவலர்களும், பணியாளர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போனில் கூட தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாது. இ-மெயில் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியாது. பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் இப்படி முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படுவார்கள். நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மட்டும் தங்கள் வீட்டுக்குச் சென்று வர அனுமதி உண்டு.
பாஜக தலைமையிலான புதிய அரசின் முதல் முழுமையான பட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
இந்தியா
34 mins ago
வணிகம்
35 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago