பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா புதிய ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்துவதாக, ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.
ஹெல்ப்லைன் 182
அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், "பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவை எண் '182' அறிமுகப்படுத்தப்படுகிறது.
உதவி எண் 138
அதேவேளையில், ரயில்வே உதவி எண் '138', அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்றார் அவர்.
மேலும், "ரயில்வே இருப்புப் பாதை தூரம் 20 % அதிகரிக்கப்படும். தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ரயில் நிலையம், ரயில் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும். ரயில் நிலையங்களின் தூய்மையை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்" என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
16 mins ago
சினிமா
21 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago