தவறான பாதையில் சென்றது யார்? - பிரியங்காவுக்கு மேனகா பதிலடி

By செய்திப்பிரிவு

யார் தவறான பாதையில் சென்றார்கள் என்பதை நாடு முடிவு செய்யும் என வருண் குறித்த பிரியங்கா காந்தியின் கருத்துக்கு மேனகா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அமேதி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத் தில் பேசிய பிரியங்கா காந்தி, “வருண் காந்தி என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் என் தம்பி. ஆனால், அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார். குடும்பத்தில் இளையவர் ஒருவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் மூத்தவர்கள் அவருக்குச் சரியான பாதையைக் காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் என் தம்பிக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும் என வேண்டுகிறேன்” எனக் கூறியிருந்தார். இதற்கு மேனகா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நாட்டுக்குச் சேவை செய்யும் பணியில், வருண் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாரா என்பதை இந்நாடு முடிவு செய்யும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

வர்த்தக உலகம்

27 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்