நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
"பிரிவினைவாத தலைவர்கள் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பேரணிகள் நடத்தப்படக் கூடும் என்பதால் சபாகடல், மகாராஜ் கஞ்ச், கான்யார், ரயின்வாரி, நோவாட்டா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு கோடியாபாக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்சல் குரு கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதியன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago