ராய்பரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து நீதிபதி போட்டி

By செய்திப்பிரிவு

ராய்பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன் போட்டியிடுகிறார். இவர் 2014 மக்களவை தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.

சோனியாவை நீதிபதி எதிர்த்துப் போட்டியிடும் அதேசமயம், அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அஜய் அகர்வால் போட்டியிடுகிறார்.

லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான ஆதர்ஷ் சாஸ்திரி, உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தில் ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டி யிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தின் தென் சென்னை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக ஜாஹிர் உசைன் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை பிராட்வேயில் வசிப்பவரான ஜாஹிர், ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது அதை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்