மக்களவைக்கான 2ம் கட்டத் தேர்தலில் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப்பிரதேசம் ஆகிய 4 வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு புதன்கிழமை நடந்தது.
இந்த தேர்தலுடன் அருணாசலப் பிரதேச சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 60 உறுப்பினர்களை கொண்ட இந்த சட்டசபைக்கு ஏற்கெனவே 11 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
மக்களவைக்கான தேர்தலில் நாகாலாந்தில் 84.64 சதவீதம், மணிப்பூரில் 80 சதவீதம், மேகாலயத்தில் 71 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
அருணாசலப் பிரதேசத்தில் அருணாசல் மேற்கு, கிழக்கு ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், மேகாலயத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு தொகுதிக்கும், மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் ஊரகத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மணிப்பூர் உள் தொகுதிக்கு ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
கருத்துப் பேழை
3 mins ago
சுற்றுலா
40 mins ago
சினிமா
45 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago