குஜராத் கடல் எல்லையில் வெடிபொருள் படகு: பாக். மீது பாஜக கடும் தாக்கு

By பிடிஐ

குஜராத் கடல் எல்லையில் வெடிபொருட்களுடன் இந்தியப் பகுதியில் நுழைந்த பாக். மீன்பிடிப் படகின் சதிவேலையை இந்திய கடலோரக் காவற்படை முறியடித்தது.

இந்த சதிவேலை குறித்து பாஜக பாகிஸ்தான் மீது கடும் தாக்குதல் தொடுத்தது.

இது குறித்து பாஜக தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும் போது, “வெறுப்படைந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை இந்தியாவுக்கு எதிராக செய்த இன்னொரு விரய முயற்சியாகும். தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தும் வருகிறது பாகிஸ்தான்.

பயங்கரவாத நடவடிக்கையை திறமையாக முறியடித்த கடலோரக்காவல் படையை பாஜக மனம் திறந்து பாராட்டுகிறது. படைகள் பயங்கரவாதத்தை முறியடிக்க சுயமாக, சுதந்திரமாகச் செயல் பிரதமர் மோடி அளித்த அதிகாரம் ஆகும். இது மோடின் தலைமைப் பண்பை எடுத்துரைக்கிறது.

வெங்கைய நாயுடு தெரிவிக்கும் போது, “பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு இது தற்போது ஒரு தீராப்பழக்கமாகவே ஆகிவிட்டது” என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறும் போது, “பயங்கரவாத சதிவேலைக்கான முயற்சியாகவே இது தெரிகிறது. கடலோரக் காவற்படையின் செயலை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்