ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக-வுடன் தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் நடத்தியது என்ற செய்திகளை உமர் அப்துல்லா கடுமையாக மறுத்துள்ளார்.
தேர்தலில் 15 இடங்கள் வென்ற தேசிய மாநாடு, 25 இடங்கள் வென்ற பாஜக-வை ஆதரித்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக நேற்று செய்திகள் எழுந்தன.
ஆனால், உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இதனை கடுமையாக மறுத்துள்ளார்:
“பாஜக-தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் பற்றி நிறைய கதைகள் புழங்கி வருகின்றன. நான் வலிமையாகக் கூறுகிறேன், அப்படிப்பட்ட உடன்பாடோ, பேச்சுவார்த்தைகளோ நடைபெறவில்லை.” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் பதிவில், “மக்கள் ஜனநாயகக் கட்சி/பாஜக/காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து யாராவது ஒருவர் ஆட்சியமைக்க முன்னெடுப்பு செய்யலாம். வரவர மடத்தனமான வதந்திகளை மறுப்பதே முழு நேர வேலையாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
8 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
6 mins ago
சினிமா
24 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
18 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
32 mins ago
வலைஞர் பக்கம்
36 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
46 mins ago