பொதுச் சொத்தை அசிங்கப்படுத்திய குற்றத்துக்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
டெல்லி கன்டோன்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரேந்தர் சிங். கடந்த 2014-ம் ஆண்டு தெற்கு டெல்லி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியும், விளம்பரப் பலகைகள் வைத்தும் பொதுச் சொத்தை அசிங்கப்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ஆஜராக பல முறை சுரேந்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணையின் போது ஆஜராகவில்லை.
இந்த வழக்கு டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் அஷுகார்க் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரேந்தர் சிங்கை ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.- ஐஏஎன்எஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
50 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago