பாஜகவின் தடைகளை தாண்டி அகமது படேல் வெற்றி: கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கருத்து

By இரா.வினோத்

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரம் நடந்ததால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், உடனடியாக 44 எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசுவிடுதியில் தங்க வைத்தது. இந்த எம்எல்ஏக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், எம்பி டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் செய்தனர். இதனால் பாஜகவின் குதிரை பேரத்துக்கு பெரும் தடை ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென சிவகுமார், சுரேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் 4 நாட்கள் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது பல்வேறு தடைகளை தாண்டி காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து சிவகுமார் கூறும்போது, ‘‘இது பண பலம், அதிகார பலத்துக்கு எதிரான வெற்றி. அகமது படேலுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நன்றி. கட்சி மேலிடம் எனக்கு கொடுத்த வேலையை செய்தேன். அகமது படேலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் எனக்கு ஏராளமான நெருக்கடி ஏற்பட்டபோதும், தற்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. மகிழ்ச்சியாக உள்ளது''என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்