வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றத்திலேயே இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது: பிரதமர் மோடி

By பிடிஐ

வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இந்தியா முழுவதிலும் வளர்ச்சியை காண முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்கிறேன். இந்தப் பயணம் அனைத்து தரப்பு மக்களையும் நான் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பாக அமையும். அதற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

வளம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் மிகவும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த பயணத்தில் இம்மாநிலங்களின் வளர்ச்சிகான திட்டங்களை வகுக்க ஆர்வமாக உள்ளேன். வளம் கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையாது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

33 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்