நாட்டிலுள்ள 24 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் காலிப்பணியிட எண்ணிக்கை 470 ஆக அதிகரித் துள்ளது.
சட்ட அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, உயர் நீதிமன்றங்களில் கடந்த 2015-ம் ஆண்டு 392 நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் இருந்தன. இது, 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் 443 ஆக உயர்ந்தது. தற்போது ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 470 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இதில் அதிகபட்சமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 82 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் 39 காலிப்பணி யிடங்களும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 37, ஆந்திரா-தெலங்கானா (36), கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 35 நீதிபதி காலிப்பணியிடங்களும் உள்ளன.
பஞ்சாப் - ஹரியாணா, ஆந்திரா-தெலங்கானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், பாட்னா, அலகாபாத், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் தற்காலிக தலைமை நீதிபதியைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
16 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago