டெல்லியில் ஏ.டி.எம். இயந்திரமே திருடப்பட்டதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

மேற்கு டெல்லியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் இருந்து ஏ.டி.எம் இயந்திரமே திருடப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி என்றே செய்திகள் வரும் நிலையில், ஏ.டி.எம். இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டெல்லியில், நரேலா எனும் பகுதியில் யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தை இன்று காலை சுத்தப்படுத்த வந்த துப்புரவு தொழிலாளி, ஏ.டி.எம். இயந்திரம் களவாடப்பட்டது தொடர்பாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரம் மட்டுமல்லாமல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் திருடப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பவம் நடந்த ஏ.டி.எம்- மையத்திற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. பாதுகாப்பற்ற அந்த மையத்தை சூறையாடும் முன்னர் தெரு விளக்குகளும் உடைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

22 mins ago

உலகம்

22 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்