முல்லை பெரியாறு பிரச்சினையில் சட்ட ரீதியிலான வழிகளை பரிசீலிப்போம்: உம்மன் சாண்டி

By பிடிஐ

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி என்ற அளவிலேயே தொடர தேவையான சட்ட ரீதிலியிலான வழிகள் குறித்து பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது, " முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட தலைமைச் செயலாளர், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதை அமைச்சரவையில் குறிப்பிட்டார்.

அணை பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்ற கேரள அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்ற நியமித்த உயர்நிலைக் குழு நிராகரித்தது. கேரள மக்களின் பாதுக்காப்பை பொருட்டு இந்த விவகாரத்தில் சட்டரீதியான வழிகள் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்