பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை

By பிடிஐ

பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் போதை பொருட்களை கடத்தி வந்த இரு பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள சோஹானா நிலையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன் தினம் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சிலர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தனர். இதையடுத்து அவர் களை எச்சரித்த இந்திய வீரர்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி செல்லும்படி வலியுறுத்தினர். எனினும் அவர்கள் இந்தியப் பகுதிக் குள் நுழைய முயன்றதால் பாது காப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் உயிரிழந் தனர். படுகாயமடைந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.

இது குறித்து செய்தியாளர் களிடம் பேட்டியளித்த எல்லை பாது காப்பு படை உயரதிகாரி, ‘‘உயிரிழந் தவர்களிடம் இருந்து 15 பாக் கெட்டுகள் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்துள் ளோம். தவிர துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்களையும் கைப் பற்றியுள்ளோம். இதை வைத்து பார்க்கும்போது அவர்கள் எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல்காரர்களாக இருக்கலாம் என தெரிகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்