எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது. தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்களுக்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இந்திய ராணுவம் தரப்பில் அவ்வப்போது பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அது குறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
நவ்ஷெரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்றும், ஊடுருவல்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவ உயர்அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் பொருட்டாகவே இன்று இந்த அறிவப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago