அதிகார பகிர்வு ஒப்பந்தத்துக்கு மதிப்பு அளித்து நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
நேபாளி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அந்நாட்டின் 39-வது பிரதமராக கடந்த 2016, ஆகஸ்ட் 3-ம் தேதி பிரசண்டா பதவியேற்றுக் கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் தலைவரான பிரசண்டா அப்போது கூட்டணியில் இருந்த நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டார். அதில் 9 மாதங்களுக்கு பின் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிகாரத்தை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்சிகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தின்படி வரும் 2018-ம் ஆண்டு வரை மாறி, மாறி ஆட்சியில் அமர்வார்கள் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
கார்ட்டூன்
1 hour ago
இந்தியா
46 mins ago
வர்த்தக உலகம்
50 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago