மாயமான மோடியின் புன்னகை: ராகுல் காந்தி கேலிப் பேச்சு

By பிடிஐ

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால், பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் இருந்த புன்னகை மாயமாகிவிட்டது என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேலியாக பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், 4-வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது.

பண்டாவில் திங்கட்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். தான் உத்தரப் பிரதேசத்தின் வளர்ப்பு மகன் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, இந்த கூட்டத்தின்போது ராகுல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் ஆளும் சமாஜ்வாதியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதால் பிரதமர் மோடியின் முகத்தில் புன்னகை மறைந்துவிட்டது என்றும் கேலியாகப் பேசினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்