காருக்குள் அட்டூழியம்: நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்

By செய்திப்பிரிவு

நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கேரள காவல்துறையினர், பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ஒருவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக கேரள போலீஸ் மற்றும் மலையாள செய்தி ஊடகங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் நள்ளிரவுக்குப் பின் பாவனா காரில் சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது காருக்குள் புகுந்தது.

பாலாரிவட்டம் எனும் இடம் வரை, காருக்குள் பாவனாவை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கின்றனர். பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் என்பவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தன் காருக்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில், தன்னிடம் முன்னர் பணிபுரிந்த கார் ஓட்டுநர் ஒருவரும் அடங்குவார் என்று போலீஸிடம் பாவனா தெரிவித்துள்ளார்.

காருக்குள் பாவனாவை துன்புறுத்தியுடன், அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அந்த மர்ம கும்பல் படம் பிடித்துள்ளது.

பாலாரிவட்டம் பகுதியை அடைந்தபோது, காரில் இருந்து அந்த கும்பல் இறங்கி வேறொரு காரில் தப்பிச் சென்றது.

பின்னர், கக்கநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டில் பாவனா அடைக்கலம் ஆனார். தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், அங்கு வந்த போலீஸார், பாவனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முக்கியமான ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்