ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மறு சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதின்றத்தில் ஜம்மு - காஷ்மீர் அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான வழக்கு ஒன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருவதால், அதே அமர்வு முன் இந்த மனுவும் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago