பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மாநிலங்களவையில் நேற்று தனது முதல் நாடாளுமன்ற அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் வாழ்த்து தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று, தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பாஜக உறுப்பினர் மெகராஜ் ஜெயினை அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அழைத்தார்.
இதற்கு மெகராஜ், “இந்த அறிக்கையை குழுவின் சக உறுப்பினரான சுரேஷ் கோபி தாக்கல் செய்வார்” என்று கூறி அமர்ந்தார். இதையடுத்து நிலைக் குழு அறிக்கையை சுரேஷ் கோபி தாக்கல் செய்தார்.அப்போது சுரேஷ் கோபியை நோக்கி பி.ஜே.குரியன் பேசும் போது, “உங்களைத் திரைப்படங் களில் பார்த்திருக்கிறேன். நாடாளு மன்றத்தில் நீங்கள் அறிக்கை தாக்கல் செய்வதை முதல் முறை யாக பார்க்கிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
இதற்கு அனைத்து உறுப்பினர் களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.சுரேஷ் கோபி, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பின ராக நியமிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
35 mins ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
1 hour ago
உலகம்
4 hours ago