தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தையை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தையைக் காப்பாற்றிய 5 வயது சிறுவனுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று விருது வழங்கப்பட்டது.

குண்டூர் மாவட்டம் வைகுண்ட புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் நந்து (3) மற்றும் சில சிறுவர்கள் கடந்த திங்கள்கிழமை விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள மூடப்படாத தண்ணீர் தொட்டியில் நந்து தவறி விழுந்துள்ளான்.

அப்போது, பரிசுத்தம் என்பவரின் மகன் ஜோசப் (5) நந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு, அரை மணி நேரம் கீழே விழாமல் காப்பாற்ற முயற்சித்தான். தனது கால்களை பின்னால் இருந்த மரத்தைப் பிடித்தபடி ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டான். இதைக் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஓடி வந்து நந்துவைக் காப்பாற்றினர்.

ஜோசப்புக்கு மாவட்ட கல்வி துறை சார்பில் நேற்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

சுற்றுலா

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்