நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 12 வீரர்களின் குடும்பங்களுக்கு அக் ஷய் குமார் ரூ.1.08 கோடி நிதி

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதி கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் ரூ.1.08 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மறைந்திருந்த நக்சல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பங் களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.35 லட்சம், சிஆர்பிஎப் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம், சிஆர்பிஎப் நல நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக் ஷய் குமார் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிவாரண உதவியை அளித்துள்ளார். இந்தத் தொகை 12 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.9 லட்சமாக பிரித்து வழங்கப்பட்டது.

வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் அக் ஷய் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் நிவாரண உதவி வழங்குவது குறித்து ஆலோசித்தார். இதனை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து வீரர் களின் குடும்ப உறுப்பினர்கள் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.9 லட்சத்தை அக் ஷய் குமார் டெபாசிட் செய்தார்.

சாய்னா நேவால் உதவி

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், 12 வீரர் களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிவாரண உதவி வழங்க முடிவு செய்துள்ளார். அவர் வழங்கும் நிதியுதவி 12 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என பிரித்து வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்