டெல்லியின் நரேலா பகுதியில் இயங்கிவரும் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் ஒருவர் பலியானார்; மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12.10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. உடனே 24 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே, தீ அணைக்கப்பட்டது'' என்றனர்.
காவல்துறை தரப்பில் கூறியதாவது: விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள். தீ விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago