சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் தண்டர் வனப் பகுதியில் நக்ஸல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் தண்டர் வனப் பகுதியில் நக்ஸல் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட ரிசர்வ் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப் படையி னர் நேற்று முன்தினம் இரவு தேடு தல் வேட்டையை தொடங்கினர்.
மர்தூம் காவல்நிலைய எல் லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கு பதுங்கி யிருந்த நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு மணிநேரத்துக்கும் மேல் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்தது.
பின்னர், நக்ஸலைட்டுகள் அங் கிருந்து தப்பியோடிவிட்டனர். மோதல் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டபோது, மாவோ யிஸ்ட் சீருடை அணிந்த நக்ஸல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப் பட்டது. அங்கிருந்து துப்பாக்கி, பைப் வெடிகுண்டு மற்றும் ஏராள மான நக்ஸல் தொடர்பான பொருட் களும் கைப்பற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
9 hours ago