இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய உளவாளி இன்று (சனிக்கிழமை) ஜம்முவில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இந்திய ராணுவ புலனாய்வு மையம் வெளியிட்ட தகவலில், "சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சான்ஜியா கிராமத்தைச் சேர்ந்த போஜ்ராஜ் என்பவரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. விசாரணையில் அவர் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையின் ஜெர்டா கிராமத்தில் சுற்றித் திரிந்த போஜ்ராஜ் தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் போஜ்ராஜை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
சிம் கார்டு, வரைபடங்கள் பறிமுதல்:
கைது செய்யப்பட்ட போஜ்ராஜிடமிருந்து இரண்டு சிம் கார்டுகள், இரண்டு கைபேசிகள், வரைபடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
59 mins ago
விளையாட்டு
51 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago