ஜம்மு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது

By பிடிஐ

இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய உளவாளி இன்று (சனிக்கிழமை) ஜம்முவில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக இந்திய ராணுவ புலனாய்வு மையம் வெளியிட்ட தகவலில், "சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சான்ஜியா கிராமத்தைச் சேர்ந்த போஜ்ராஜ் என்பவரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. விசாரணையில் அவர் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையின் ஜெர்டா கிராமத்தில் சுற்றித் திரிந்த போஜ்ராஜ் தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் போஜ்ராஜை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

சிம் கார்டு, வரைபடங்கள் பறிமுதல்:

கைது செய்யப்பட்ட போஜ்ராஜிடமிருந்து இரண்டு சிம் கார்டுகள், இரண்டு கைபேசிகள், வரைபடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

51 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்