ரயில்வே பட்ஜெட்: சேலம்-ஓமலூர் இடையே இரட்டை ரயில் பாதை

By செய்திப்பிரிவு

ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில், 2014-15-ம் ஆண்டில் 19 புதிய ரயில் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சேலம்- ஓமலூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டிவனம்- நகரி இருப்புப் பாதை திட்டத்தை புதுச்சேரி வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013-14-ம் நிதியாண்டில் ரயில்வேயில் 1532 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர்- சேலம் இடையே 85 கி.மீட்டர் தொலைவுக்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 2027 கி.மீட்டர் தொலைவுக்கு புதிதாக இருப்புப் பாதைகளும், 2227 கி.மீட்டர் தொலைவுக்கு இரட்டை பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 4556 கி.மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

22 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்