வக்பு சொத்துகளை இஸ்லாமிய சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படுத் தலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தினார்.
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய வக்பு மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கிவைத்து பிரதமர் புதன்கிழமை பேசியதாவது:
இந்த நிறுவனமானது வக்பு நிலங்களில் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்களை திறக்க நிதி ஆதாரங்களை திரட்டு வதற்கு உதவியாக இருக்கும். நாட்டில் உள்ள சிறுபான்மையினர் நலன் மேம்பாடு தொடர்பான முயற்சியில் இன்னொரு நடவ டிக்கைதான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தது.
வக்புசொத்துகளில் நிறைய வருவாய் கிடைக்கும் என்பதால் அதை இந்த சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த கமிட்டி பரிந்துரை அமலாக்கத்தின் தொடர்ச்சியே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதும் என்றார் மன்மோகன்சிங்.
நல்லிணக்கம் குலையக்கூடாது: சோனியா
சிறு சிறு சம்பவங்களுக்காக நாட்டில் வகுப்பு நல்லிணக்கம் குலைய அனுமதிக்கக் கூடாது. அத்தகைய சம்பவம் தலை தூக்கினால் விருப்பு வெறுப்புக்கு இடம் தராமல் கடுமையாக கையாண்டு ஒடுக்க வேண்டும் என்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் வகுப்பு வன்முறை மசோதா விரைவில் தாக்கலாகும் என்ற நம்பிக்கை உள்ளது. சமூக நேயத்தையும் நாட்டின் பாரம்பரியமிக்க மதச் சார்பின்மையையும் கட்டிக்காப்பது தான் இந்த மசோதாவின் நோக்கம்
சிறு சம்பவங்களால் வகுப்பு நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கவே கூடாது. அந்த சம்பவங்களை விருப்பு வெறுப்புக்கு இடமின்றி ஒடுக்க வேண்டும்.
மதச்சார்பின்மை கொள்கை களை பாதுகாப்பதும் சிறுபான் மையினருக்கு சரிசம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் பொறுப்பாகும். தாம் பாதுகாப்பாக இருக்கிறோம், என்கிற நம்பிக்கை சிறுபான் மையினருக்கு வர வேண்டும். மேலும் சட்ட ஒழுங்கு நடைமுறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை பலவீனப்படுத்தும் சக்திகள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
நல்ல திட்டங்கள் மட்டுமே போதுமானதாகி விடாது. அவற்றை சிரத்தையுடன் அமலாக்குவதும் முக்கியமானதாகும். சில வேளைகளில் அரசு நலத்திட்டங்களின் பலன் உரியவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே தான் இது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு தனி அமைப்பு ஏற்படுத்துவது அவசிய மானதாகும் என்றார் சோனியா காந்தி.
திடீர் ரகளை செய்த நபர்
பிரதமரும் சோனியா காந்தியும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திடீரென ஒரு நபர் ரகளையில் இறங்கினார். சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை என்று அவர் குறை சொன்னார். பிரதமர் பேசி முடித்ததும் அந்த நபர் இந்த ரகளையில் இறங்கினார்
அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பிறகும் அவர் தொடர்ந்து ரகளை செய்ததால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர் பாதுகாப்பு அதிகாரிகள்,
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தான் ஒரு டாக்டர் என்றும் வடகிழக்கு டெல்லி ஜாப்ராபாதில் வசிக்கும் தான், சமூக நலப்பணிகளில் ஈடுபடுவதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.
குறைகளை தெரிவித்து நேரில் பேச அனுமதிக்கும்படி கேட்டு 150 கடிதங்கள் எழுதினேன். பதில் வரவில்லை. எனவே வேறு வழி தெரியாததால் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி குறைகளை தெரிவிக்க வழி செய்தேன் என்றார் அவர்.இதனிடையே, அந்த நபர் தெரிவித்த விவரங்கள் பற்றி பரிசீலிப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
வணிகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago