மும்பை: 2 கடற்படை படகுகள் தீயில் எரிந்தன

By ஐஏஎன்எஸ்

மும்பை கடற்பகுதியில் ரோந்துப் பணியில் பயன்படுத்தப்பட்டு வந்த 2 படகுகள் நேற்று தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கின.

இந்திய கடற்படைக்கு சொந்தமாக 2 பைபர் கிளாஸ் படகுகள், மும்பை கடற்படை தளத்தில் அருகருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை, இவற்றில் ஒன்றில் தீப்பற்றியது. பலத்த காற்று காரணமாக தீ மற்றொரு படகுக்கும் பரவியது.

இதையடுத்து கடற்படை மற்றும் கடற்படை தள தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் படகுகள் பலத்த சேதம் அடைந்ததால், தண்ணீர் உள்ளே புகுந்து கடலில் மூழ்கின. அவற்றை மீட்கும் முயற்சியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவை எந்த வகை படகுகள், எப்போது தயாரிக்கப்பட்டவை போன்ற விவரங்கள் வெளியிடப் படவில்லை. இப்படகுகள் மீட்கப் பட்ட பிறகே, அவை மீண்டும் பயன்பாட்டுக்கு தகுந்தவையா என்பது தெரியவரும் என கடற் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து கடற்படை வட்டாரங்கள் கூறும்போது, “இந்த சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது கடற்படையின் பிற சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை. விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

க்ரைம்

49 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்