ஹரியாணா மாநில பொதுக்கூட்டத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசிக்கொண்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷூ வீசப்பட்டது.
எனினும், இந்த ஷூ வீச்சு தாக்குதலில் இருந்து கேஜ்ரிவால் நூலிழையில் தப்பினார். பிரதமர் மோடியை குறைகூறி பேசும்போது ஆவேசமாக வீசப்பட்ட ஷூ, கேஜ்ரிவால் மீது படாமல், பக்கவாட்டில் சென்று விழுந்தது. ஹரியாணா மாநிலம், ரோட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் மீது ஷூ வீசிய இளைஞரை ஆம் ஆத்மி தொண்டர்கள் அடித்து உதைத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஷூ வீசிய நபர், ஹரியாணாவின் தாத்ரி மாவட்டம், மோரி மக்ரானா கிராமத்தைச் சேர்ந்த 26 வயது விகாஸ் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago