அமலாக்கப் பிரிவு தொடுத்துள்ள வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதற்காக, கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பரிமாற்றம் நடந்தது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தயாளு தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவில், ‘கலைஞர் டிவிக்கு பண பரிமாற்றம் நடைபெற்றது குறித்து மிகக் குறைந்த பங்குகளைக் கொண்டிருந்த தயாளுவுக்கு எதுவும் தெரியாது. அவருக்கு வயதாகி விட்டதால், ஞாபக மறதி உள்ளிட்ட நோய்கள் உள்ளன. எனவே, அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நேற்று தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், எந்த முறையீடாக இருந்தாலும் சிபிஐ நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago