அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பிஹார் கிளை மையத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 30-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள இது, மத்திய பல்கலைக்கழகங்களில் மிகவும் பழமையானது. கேரளா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய இடங்களில் கல்வி மையங்கள் தொடங்கப்படும் என ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வரும் 30-ம் தேதி பிஹாரின் கிஷண்கஞ்ச் மாவட்டம் சக்லா கிராமத்தில் அலிகர் கல்வி மையத்துக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டுகிறார். கேரளா மற்றும் முர்ஷிதாபாத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் இடம் கிடைக்காத காரணத்தால் இது தள்ளிப் போகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
க்ரைம்
11 hours ago
இந்தியா
11 hours ago