மகாராஷ்டிராவில் கடலில் குளிக்கச் சென்ற 8 மாணவர்கள் பலி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கர்நாடகா தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள மராத்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். மால்வான் கடற்பகுதியில் இன்று (சனிக்கிழமை) மதியம் கடலில் இறங்கி குளித்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "இன்று காலை பெல்காம் மாவட்டத்திலிருந்து மகாராஷ்டிராவின் மால்வான் பகுதியில் உள்ள வாயிரி கடற்கரை பகுதிக்கு கல்லூரி மாணவர்கள் 50 பேர் சுற்றுலா வந்திருந்தனர்.

கடல்சீற்றம் அதிகமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறியும் மாணவர்கள் சிலர் கடலுக்குள் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் கடல் அலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு உள்ளூர்காரர்கள் சிலர் உதவிக்கு வந்துள்ளனர். 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. 2 மாணவிகள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

விளையாட்டு

21 mins ago

இணைப்பிதழ்கள்

47 mins ago

தமிழகம்

57 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்