அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்கள், உருட்டுக் கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றமடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
சென்னை அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மாநிலக் கல்லூரி மாணவர்கள் பலர் ஒன்று கூடினர். அப்போது அங்கு மற்றொரு கல்லூரி மாணவர்களும் கும்பலாக வந்தனர். திடீரென இரு தரப்பு மாணவர்களும் கற்களை வீசி, உருட்டுக் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்து பதற்றம் அடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பழக்கடை வியாபாரி பாலாஜி என்பவர் தடுக்க முயன்றார். அவரையும் மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்து அம்பத்தூர் போலீஸார் வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அஜய், விமல், ஜோசப் ஆகியோரை பிடித்தனர். இவர்கள் அனைவரும் பி.ஏ. முதல் ஆண்டு மாணவர்கள். மற்றவர்கள் தப்பிவிட்டனர். மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago