நேர்மையான கைகள் ஒன்றிணைந்தால் நாட்டில் எல்லாம் சாத்தியம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை டெல்லி மாநில முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருடன் மேலும் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "டெல்லி மாநில பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க முடியும். எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க என்னிடம் மந்திரக் கோல் ஏதும் இல்லை, இருந்தாலும் நேர்மையான, தகுதி வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்தால் இது சாத்தியமாகும்.
டெல்லியில் உள்ள நேர்மையான உயர் அதிகாரிகளும், ஊழியர்களும் என்னை இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன். அவர்களை சரியான இடங்களில் பணியமர்த்துவதால் டெல்லி மாநில பிரச்சினைகள் சரி செய்யப்படும். நேர்மையானவர்கள் ஒன்றுபடும் போது ஊழலற்ற ஆட்சி அமைக்க முடியும்" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago