கோவாவில் முதல்வர் லட்சுமி காந்த் பார்சேகர் (பாஜக) தலை மையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) நேற்று விலக்கிக் கொண்டது.
கோவாவில் பாஜக-எம்ஜிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எம்ஜிபி கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட எம்ஜிபி முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எம்ஜிபி கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர் ஆளுநர் மிருதுலா சின்ஹாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 23 ஆகக் குறைந்துள்ளது. இதில் 2 பேர் சுயேச்சைகள் ஆவர். எனினும் 40 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் போது மான பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசுக்கு ஆபத்து இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago