மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்: 12-ம் வகுப்பில் சாதனை படைத்தவருக்கு நேர்ந்த கொடூரம்

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்த ஹரியாணா மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் கைரனாவில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள் வழி மறித்து கடத்திச் சென்றனர். கிராமத்தில் யாரும் இல்லாத வயல்வெளிக்கு காரை ஓட்டிச் சென்றனர். அங்கு தயாராக இருந்த மேலும் இரு இளைஞர்கள் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது. மயக்க நிலையில் இருந்த மாணவி மீ்ட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலகாரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசு தலைவர் பதக்கம் பெற்றவர். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாணவியை அவரது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹரியாணா போலீஸார் கூறுகையில் ‘‘சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம்’’ எனக் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்