பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண், தன்னுடன் பணிபுரியும் இளநிலை ஊழியருக்கு சிறுநீரகம் தானம் செய்திருப்பது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவின் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண்ணுக்கு அவசரமாகச் சிறுநீரகம் தேவைப்பட்டது. அவரது குடும்பத்தினர், உறவினர் என்று யாருடனும் அவரது உடல்நிலை பொருந்தவில்லை. இறுதியில், 40 வயதான அவரது சக ஊழியர் உதவிக்கரம் நீட்டினார். செப்டம்பர் 3-ல் நடந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமாக உள்ளனர். “தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்காக சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்த பெண்ணின் செயல் ஒரு சிறந்த முன்னுதாரணம்” என்கிறார்கள் மருத்துவர்கள். மானுடம் வெல்லட்டும்!
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
கருத்துப் பேழை
42 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
26 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 mins ago