அசாம் என்ஆர்சி வரைவுப் பட்டியல்; விடுபட்டவர்களிடம் 60 நாட்கள் விண்ணப்பம் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

அசாமில் என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) வரைவுப் பட்டியலில் விடுபட்ட அனைவரிடம் இருந்தும் விண்ணப்பம் மற்றும் ஆட்சேபங்களை பதிவுசெய்யும் நடைமுறைகளைப் மீண்டும் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாமில் இந்த ஆண்டு ஜூலையில் வெளியான என்ஆர்சி இறுதி வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.எப்.நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “என்ஆர்சி- யில் விடுபட்ட அனைவரிடமிருந் தும் பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டும். வரும் 25-ம் தேதி முதல் 60 நாட்களுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பிரச்சினை யின் வீரியம் கருதி குடி மக்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படும் ஓரே மாநிலம் அசாம் ஆகும். வங்க தேசத்தில் இருந்து குடியேறுபவர்களால் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க இது பராமரிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

15 mins ago

க்ரைம்

12 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்