மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த அதிரடி: 17 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

By செய்திப்பிரிவு

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் நகராட்சியைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளை மட்டுமே கைபற்றியது.

தேர்தல் முடிவு வெளியான பிறகு, மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ உட்பட அடுத்தடுத்து பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் நகராட்சியைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜக மூத்த தலைவர் முகுல் ராயும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்