காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

By பிடிஐ

காஷ்மீரில் இன்று காலை (சனிக்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அனந்தநாக் மாவட்டத்தில் வேரிநாக் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்புத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள தீவிரவாதிகள் தப்பியோடினர்.

உயிரிழந்த தீவிரவாதி ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

புல்வாமா மாவட்டத்தின் பஞ்சாரன் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து நேற்று நடந்த தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று காலை மோதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 14 அன்று ஸ்ரீநகரில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பிறகு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்