மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இன்று (சனிக்கிழமை) போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து டோம்கால் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''டோம்கால் அருகே குச்சியாமோரா கிராமத்தில் கும்பல் ஒன்று குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் மூன்றுபேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குண்டடிபட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட மூவருமே திரணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். இக் கொலைக்குப் பின்னால் ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா என எங்கள் மூத்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்'' என்றார்.
இறந்த இருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொலைக்கு பாஜக ஆதரவுடைய குற்றவாளிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''இக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இன்னொரு கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டவர்கள்.
அக்கொலையை நேரில் நான் நேரில் பார்த்ததால் என்னையும் அவர்கள் கொல்லத் திட்டமிட்டனர். நேற்று அவர்கள் இங்கு வந்த போது நான் வீட்டில் இல்லாததால் என்னுடைய மாமாவையும் மற்றும் மருமகனையும் கொன்றுள்ளனர்'' என்றார்.
இப்பகுதியில் தொடர்ந்து சோதனைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
54 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago