மக்களவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்து, போட்டியிட அவர் மறுத்து விட்டார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. பாஜக - அகாலிதளம் ஓரணியாகவும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகின்றன. இதனால் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் அமித்சர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு போட்டியிட, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அம்ரீந்தர் சிங் இன்று செய்தியாளர்களுக்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. அமித்சர் தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை. இதனால் தேர்தலில் பாதிப்பு ஏதும் வராது. அவ்வாறு பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
இவ்வாறு அம்ரீந்தர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago