சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் வெளிநாடுகள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சாம் பிட்ரோடா, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கடந்த 84-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்து கேள்வி எழுந்தது.
அதற்கு சாம் பிட்ரோடா பதில் அளிக்கையில், ‘நடந்தது நடந்துவிட்டது; அதனால் என்ன..’ என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சாம் பிட்ரோடா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சீக்கிய சகோதர, சகோதரிகள் கடந்த 84-ம் ஆண்டில் இக்கட்டான தருணத்தில் இருந்ததை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், கலவரம் தொடர்பாக நான் கூறிய கருத்துகளை, உண்மைகளைப் பாஜக சிதைக்கிறது’’ என தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பின்னர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்த கருத்துக்கு சாம் பிட்ரோடா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், பத்தேகர் சாஹிபில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ''கடந்த 1984-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. இதை நான் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட கருத்தைக் கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நான் தெரிவித்திருக்கிறேன். அவர் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
29 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
57 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
55 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago