கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், மக்களவைத் தேர்தலில் மண்டியாவில் மஜத, காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்குபாஜக ஆதரவு தெரிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மஜத வேட்பாளர் நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுமலதாவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் மண்டியாவில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களான தர்ஷனையும், யஷ்ஷையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது தர்ஷன் பேசுகையில், “அம்பரீஷ் உயிருடன் இருந்தபோதே நாங்கள் அவரது குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வருகிறோம். இப்போது அவர் இல்லாததால் நாங்கள் சுமலதாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இத்தகைய மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்''என்றார்.
நடிகர் தர்ஷன், யஷ் ஆகியோரின் பிரச்சாரத்துக்கு மண்டியாமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மஜதவினர் இருவரையும் சரமாரியாக விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே முதல்வர் குமாரசாமி தன் மகனுக்கு பிரச்சாரம் செய்வதற்காக கன்னடதிரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளை களமிறக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பாண்டவபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிகில் குமாரசாமியிடம் பெண்கள் குடிநீர், சாலைவசதி ஆகியவை கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மஜதவினருக்கும், கிராமமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிகில் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
க்ரைம்
22 mins ago
வணிகம்
26 mins ago
சினிமா
23 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
உலகம்
45 mins ago
வணிகம்
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago