கனமழை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை மூடியிருந்ததால் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் நிலவின.
இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது, வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
எல்லையோர சாலை அமைப்புக்குழு ராணுவ பொறியாளர்களுடன் இணைந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை போக்குவரத்துக்கு ஏதுவாக சீரமைத்துள்ளனர். இதனை ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
சுமார் 3000 முதல் 6000 வாகனங்கள் பெரும்பாலும் டிரக்குகள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லக் காத்திருக்கின்றன. இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்போதைக்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல், மாநிலத்தின் மற்ற சாலைகளையும் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
கருத்துப் பேழை
3 mins ago
சுற்றுலா
40 mins ago
சினிமா
45 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago