காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: கடந்த மக்களவை தேர்தலில் நான் தேநீர் கடையில் வேலை பார்த்தவன் (சாய்வாலா) என்று நரேந்திர மோடி கூறி பிரச்சாரம் செய்தார்.
இப்போது காவலாளி (சவுகிதார்) பெயரைக் கூறி வருகிறார் மோடி. அரசியல் லாபத்துக்காக அடுத்த முறை வேறு யார் பெயரையாவது கூறி வாக்குக் கேட்பார் அவர். பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதை அரசியலாக்கி வருகிறார் பிரதமர் மோடி.
பொதுமக்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் விவரங்களைக் கூறி அதை அரசியலாக்கி வருகிறது பாஜக. அப்படியானால் எதிரி நாட்டினர் குர்தாஸ்பூர், பதன்கோட், உரி, பாரமுல்லா, புல்வாமாவில் தாக்குதல்களை நடத்தியபோது இந்த காவலாளி எங்கிருந்தார்? சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. நாட்டு மக்களின் விவசாயம், கல்வி, சுகாதாரம், வறுமை, கடன் பிரச்சினை போன்ற விஷயங்கள் குறித்து பாஜக அரசு கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
20 mins ago
இந்தியா
22 mins ago
சினிமா
35 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago