எப்.எம். சேனல்களில் ஏ.ஐ.ஆர். செய்திகளை ஒலிபரப்ப அனுமதி: மத்திய அரசு திட்டம்

By பிடிஐ

எப்.எம் ரேடியோ செனல்களில் ஆல் இந்திய ரேடியோ (ஏ.ஐ.ஆர்.) செய்திகளை ஒலிபரப்ப அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது எப்.எம். சேனல்களில் போக்குவரத்து மாற்றங்கள், அரசு திட்டங்கள் போன்றவை அறிவிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

ரோடியோவில் செய்தி வெளியிட அனுமதி தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை நடைமுறையாக்க, ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை பெற்று, பின்னர் அதனை தனியார் ரேடியோ சேனல்கள் வெளியிடலாம்" என்றார்.

இந்த நடைமுறையில் நாளடைவில் மேலும் விரிவான மாற்றங்களை கொண்டு வர இந்த திட்டம், முதல்படியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்